50+ Tamil Love Sentiment Kavithai SMS Collections True Love

காதல் என்பது உலகில் உள்ள அனைத்து உயிரினங்கள் இடமும் உள்ளது. காதல் இல்லையேல் இந்த உலகமும் இயங்காது. ஆதலால் காதல் செய்வீர். ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாட படுகிறது. காதல் செய்யும் அனைவர்க்கும் இந்த காதல் கவிதைகள் சமர்ப்பணம்.

இந்த பதிவு “காதலர் தின கவிதை” உள்ளடக்கியுள்ளது.


கருவிழிகளால் அல்ல...!

நம்பிக்கையில் தான்..!

Touching story

கண் வைக்க..!

என்றுமே வற்றாது..!

உன் நட்பிடம்..!

உணர்ந்து கொண்டேன்..! 

விட்டு கொடுத்து விட கூடாது..!

Unmaiyana Vaarthai..!

Feelful Vaarthai..!

நிழலை அணைக்கின்றேன்..!

ரத்தத்தில்..!

நின்று போனது..!


கருவிழிகளால் அல்ல...!

Sad Varigal..! Tamil Kavithai For Sad
Sad Varigal..! Tamil Kavithai For Sad

இரவில் கண் மூடியும் கூட
உன் முகத்தையே  பார்க்கிறேன்
கருவிழிகளால் அல்ல...!
மனவிழிகளால் .!


நம்பிக்கையில் தான்..!

அன்பே,
நம் பிரிவை நான்
தங்கி கொண்டிருப்பதன் காரணம்
நீயும் அதை
எண்ணி வருந்துகிறாய்
என்ற நம்பிக்கையில் தான்..!


Touching story: 

ஒரு பையன் 
and ஒரு பொண்ணு கார்ல
போறாங்க.அந்த பொண்ணு
அந்த பையன ரொம்ப
உண்மையா love பண்ணுறா,
கார்ல போகைல அந்த பொண்ணு
அந்த பையன்கிட்ட தன்னோட love
சொல்லி ஒரு letter கொடுக்குற
ஆனா அந்த பையன் அந்த
பொண்ண திட்டி கார விட்டு
இறங்க சொல்லுறான்.அந்த
பொண்ணும் இறங்குறா.ஆனா
அந்த பொண்ணு இறங்குறப்ப
ஒரு லாரி அவ மேல மோதி
அவ  இறந்துட்டா.அப்போ அந்த
பையன் அந்த லெட்டரை open
பண்ணுறான் அதுல, "நீ என்னை
பிரியும் போது என் உயிரும் பிரியும்"
It's true love....! நண்பா

கண் வைக்க..!

Lovely Kavithai in tamil
Lovely Kadhal Kavithai in Tamil

குழந்தை பருவத்தில் 
உன்னை படைத்த பிரம்மன் 
பருவத்தில் பார்த்திருந்தால்
ஒரு கண் வைத்திருந்திருப்பான்
இவ்வளவு அழகான பெண்ணை
நாமா படைத்தோமென்று..!
அப்படியே என்னிடம்
வாங்கியும் கட்டி இருப்பான்..!

யார் அவன்
என் தேவதையை மீது
கண் வைக்க..!


என்றுமே வற்றாது..!

அன்பே,
இமயத்தில் ஊற்றாகும்
கங்கை நதி கூட
ஒருநாள் வற்றி போகலாம்
ஆனால்,
என் இதயத்தில் ஊற்றாகும்
காதல் நதி என்றுமே வற்றாது..!


உன் நட்பிடம்..!

முதலில் நட்பு கொண்டேன்,
பிறகு காதல் கொண்டேன்..!
நட்பு கொண்டது உன்னிடம்,
காதல் கொண்டது உன் நட்பிடம்..!


உணர்ந்து கொண்டேன்..! 

உன் நினைவோடு பேசி பேசி
மௌன மொழி கற்று கொண்டேன்..!
உன்னுடன் கற்பனையில் பேசி பேசி
கனவை வளர்த்து கொண்டேன்..!
உன் விழிகளுடன் பேசி பேசி
காதலை உணர்ந்து கொண்டேன்..! 


விட்டு கொடுத்து விட கூடாது..!

நாம் யாருக்காக
வாழ நினைக்கிறமோ
அவர்களுக்காக கொஞ்சமாவது
விட்டு கொடுக்கலாம்..!
நமக்காக யார்
வாழ துடிக்கிறார்களோ
அவர்களுக்காக அனைத்தையும்
விட்டு கொடுக்கலாம்..!
ஆனால்
யாருக்காகவும்
நம்மை விரும்பும் உயிரை
விட்டு கொடுத்து விட கூடாது..!

Unmaiyana Vaarthai..!

உண்மையான அன்பை
சொல்லி புரிய வைக்க முடியாது...
அந்த அன்புக்கு
உரியவர்கள்  மட்டுமே உணர முடியும்..!


Feelful Vaarthai..!

நீ யாருக்காக சிரித்தாயோ அவரை
ஒருவேளை மறந்து விடலாம்
ஆனால் யாருக்காக அழுதாயோ 
அவரை ஒருநாளும்
உன்னால் மறக்க முடியாது..!
கலங்க விடாதே..!
கலங்கிய கண்களை நேசி..!

ஆனால்

நீ நேசித்த கண்களை மட்டும்
கலங்க விடாதே..!

கனவாகி போன
அவளுக்காக கவிதையோடு
வாழுகிறேன்..!

காலம் கரைவது கூட
தெரியாமல்..!



நிழலை அணைக்கின்றேன்..!

என் இதய கூண்டுக்குள்
யாரோ ஒருத்தி
மாட்டிக்கொண்டதாய் உணர்கிறேன்..!
என் கண் இமைகளில் அவள்
ஊஞ்சல் ஆடுவதை ரசிக்கின்றேன்..!
என் சுவாசத்தில்
கலந்து தும்சம் செய்யும்
அவள் வாசத்தை முகர்கின்றேன்..!
என் மனவாசலில்
வந்து வந்து செல்லும்
அவள் நிழலை அணைக்கின்றேன்..!


ரத்தத்தில்..!

காதலி தண்ணீரில்
எழுதினாலும்
காதலன் படிப்பான்..!
ஆனால்,
காதலன்
"ரத்தத்தில்"
எழுதினாலும்
காதலி சிரிப்பாள்..!


நின்று போனது..!

நீ கண்களால் பேசிய
வார்த்தையையும்
உதடுகளால் காட்டிய
ஆசையையும்
காதல் என்றெண்ணிய
என் இதயம் மட்டும்
அசையாமல் நின்று போனது..!


Post a Comment

0 Comments