காதல் தோல்வி என்பது பல இளைஞர்களை மனமுடைந்து தற்கொலையோ அல்லது திசை மாறி பயணம் செய்யவோ தூண்டாமல் இருக்க இந்த கவிதைகள் காதலில் தோல்வி அடைந்தவர்கள் படித்து மனம் ஆறுதல் அடைய எழுதப்பட்டவை. அவர்கள் வாழ்க்கை திசைமாறாமல் நேர்வழியில் சென்று வாழ்க்கையில் முன்னேறி செல்ல உதவும் இந்த கவிதைகள்.
இந்த பதிவு “காதல் தோல்வி கவிதை” உள்ளடக்கியுள்ளது.
புண்ணாகி விட்டாயே..!
காதல்..!
இறுதிவரை எனக்கு காவலனாய்..!
உயிர் பிரிந்து போகும்..!
Love Failure Tamil Kavithai..!
நம்பிக்கை..!
உணர்ந்தேன்..!
எருக்கம் பூவாக..!
வலிமை..!
தாடி..!!
Love Failure Boys Feeling..!
காதல் தோல்வி..!
மனசாட்சி..!
மீண்டும் வளருவேன் ..!
இதயம்..!
Super Love Failure Kavithai..!
மனசாட்சி..!
ஆண்களுக்கு மட்டுமே..!!
புண்ணாகி விட்டாயே..!
Tamil Love Failure SMS |
கல்லாக நீயும் இருந்தால்
வீடாவது கட்டி இருப்பேன்..
பொன்னாக நீயும் இருந்தால்
நகையாவது செய்திருப்பேன்..
மலராக நீயும் இருந்தால்
மாலையாவது முனைந்திருப்பேன்..
மானாக நீயும் இருந்தால்
விளையாடி ரசித்திருப்பேன்..
பெண்ணாக நீ இருந்ததினால்
என் இதயத்தில் முள்ளாய் குத்தி
புண்ணாகி விட்டாயே..!
பொழுது போனது கூட தெரியாமல் நேசிப்பதே காதல்..!
தூக்கத்தில் கனவாய்..!
துக்கத்தில் தோழனாய்..!
வெயிலில் நிழலாய்..!
இருளில் ஒளியாய்..!
தோல்வியில் ஆறுதலாய்..!
வெற்றியில் துணையாய்..!
இன்பத்தில் கணவனாய்..!
இறுதிவரை எனக்கு காவலனாய்..!
நானின்றி வாழ உனக்கு பழகி போகும்
ஆனால் உன் நினைவின்றி வாழ்ந்தால்
என் உயிர் பிரிந்து போகும்..!
காதல்..!
பொழுதை போக்குவதற்காக நேசிப்பதல்ல காதல்..!பொழுது போனது கூட தெரியாமல் நேசிப்பதே காதல்..!
இறுதிவரை எனக்கு காவலனாய்..!
எப்போதும் என்னோடு நீ இருக்க வேண்டும்தூக்கத்தில் கனவாய்..!
துக்கத்தில் தோழனாய்..!
வெயிலில் நிழலாய்..!
இருளில் ஒளியாய்..!
தோல்வியில் ஆறுதலாய்..!
வெற்றியில் துணையாய்..!
இன்பத்தில் கணவனாய்..!
இறுதிவரை எனக்கு காவலனாய்..!
உயிர் பிரிந்து போகும்..!
அன்பே,நானின்றி வாழ உனக்கு பழகி போகும்
ஆனால் உன் நினைவின்றி வாழ்ந்தால்
என் உயிர் பிரிந்து போகும்..!
Love Failure Tamil Kavithai..!
Love Failure Tamil Kavithai..! |
பெண்ணே..!
உன் இதயத்தை
நனைத்தேன்
இனிக்கும் தேனாக..!
அதற்காக நீ
என் இதய அறையை
ஒவ்வொன்றாக
அரித்தாய் திராவகமாக..!
அன்பே..!
உன்னை போல
எனக்கும் கற்று கொடு
நம்பியவரை
ஏமாற்றுவதற்கு..!
நம்பிக்கை..!
நம் பிரிவை
நான்
தாங்கி கொண்டிருப்பதன்
காரணம் நீயும்
அதை எண்ணி
வருந்துகிறாய்
என்ற நம்பிக்கையில் தான்..!
உன்னை 1000 பேர்
நினைக்கலாம்..!
ஆனால்
உனக்காக துடிக்கும்
என் இதயத்தை
நீ நினைக்கவும் இல்லை
நேசிக்கவும் இல்லை..!
உணர்ந்தேன்..!
காதல் கசக்கும்
மருந்தென்று தெரியும்..!
ஆனால்
உயிரை பறிக்கும்
விஷம் என்பதை
நீ ஏமாற்றிய
நாட்களில் தான்
உணர்ந்தேன்..!
எருக்கம் பூவாக..!
உன் தலையில்
ரோஜா மலராக
என் நினைவுகள்
இருக்குமென்று விரும்பினேன்..!
ஆனால்,
என் கல்லறையில்
அல்லவா இருக்கின்றன
எருக்கம் பூவாக
உன் நினைவுகள்..!
வலிமை..!
உன் நினைவுகளை
உட்கொண்டு வாழும்
என் உயிருக்கு தான்
தெரியும்
நினைவுகளின்
வலிமை..!
பிறக்கும் போது
அறியாத வலியும்..!
இறக்கும் தெரியாத
வலியும்..!
நீ என்னை
வெறுக்கும் போது
தெரிந்து கொண்டேன்..!
தாடி..!!
Feeling Corner :
அவள் முத்தமிட்ட இந்த
கன்னங்களில் யாரும் முத்தம்
இடக்கூடாது என்பதற்க்காக
நான் அமைத்த முள் வேலி தான்
இந்த தாடி..!!
Love Failure Boys Feeling..!
Love Failure Boys Feeling..! |
அவள் பின்னால்
அலைந்த நாட்களில்..!
சாலை விதிகளை மீறினேன்..!
தெரு ஒர திண்ணைக்கு காவலானேன்..!
தெரியாத சிலருக்கு எதிரியானேன்..!
புரியாத மொழியில் பேசலானேன்..!
அதுவரை அறியாத
உணர்வுகளுக்கு அடிமையானேன்..!
சலூன்காரன் நண்பன் ஆனான்..!
பக்கத்துக்கு வீட்டுக்காரன் பழக்கமானான்..!
டி கடைக்காரன் அறிமுகமானான்.!
ஆனால்,
அவளுக்கு மட்டும் தான்
நான் பிடிக்காதவனானேன்..!
காதல் தோல்வி..!
Love failure Kavithai |
பெண்ணே,
உன் பின்னால் அலைந்து
திரிந்த போதெல்லாம்
கத்தி சொன்னாய்
பிடிக்கல பிடிக்கல என்று..!
அன்று புரியல..!
எவனோ ஒருவன்
உன் கை பிடித்து
நடக்கும் போது தான்
நான் அதை உணர்ந்தேன்..!
நீ கத்தி சொன்னது
வார்த்தை அல்ல
என் இதயத்தை கிழித்த
கத்தி என்று..!
மனசாட்சி..!
மனசாட்சி இருந்தால்
ஒருமுறை, என்னோடு
இருந்த நாட்களை
நினைத்து பார்
உன் கண்களில் இருந்து
ஒருதுளி விழுந்தாலும்
போதும் என் காதல்
புனிதமாகும்..!
மீண்டும் வளருவேன் ..!
LOVE FAILURE WORD |
உன் கூந்தலில்
பூவாக மாறி நீ என்னை
தூக்கி எறிந்தாலும்
மீண்டும் பூப்பேன்..!
உன் விரலில்
நாகமாக மாறி
நீ என்னை
வெட்டி எறிந்தாலும்
மீண்டும் வளருவேன்..!
இதயம்..!
உன்னை
நினைத்து நினைத்து
ஒருநாள்
துடிப்பதை மறந்து
விட போகிறது
என் இதயம்..!
Super Love Failure Kavithai..!
உன் காதல் தோல்வியால்
உன் காதலிக்கு வேறு
காதலன் கிடைக்கலாம்..!
ஆனால்,
உன் தாய்க்கு உன்னை
போன்ற வேறு மகன்
கிடைப்பானா...!!
So Don't Suicide...
Take it easy:-)
உன் காதல் தோல்வியால்
உன் காதலிக்கு வேறு
காதலன் கிடைக்கலாம்..!
ஆனால்,
உன் தாய்க்கு உன்னை
போன்ற வேறு மகன்
கிடைப்பானா...!!
So Don't Suicide...
Take it easy:-)
மனசாட்சி..!
ஆடி போன ஆவணி..
தாவணி போன சாரி..
திவ்யா இல்லனா திரிஷா..
உஷா இல்லனா நிஷா..
அவ ஒருத்தி தான்
Figure'ரா...!!
கூற மேல சோறு போடுடா
ஆயிரம் காக்கா மச்சி..!
"GOOD NIGHT"
என்றும் அன்புடன்
Your first and best Friend
"மனசாட்சி"
ஆண்களுக்கு மட்டுமே..!!
காதலில் தோல்வி என்பது
இப்போது எல்லாம்
ஆண்களுக்கு மட்டுமே..!!
பெண்கள் சுலபமாக
மறந்து விடுறாங்க..!!
by nanum oru thoottravan
2 Comments
kathalil tholvi enbathu
ReplyDeleteippothu elam
aangaluku matume...!!!!!!!!!!!!
pengal sulabamaga
maranthu viduranga...
by nanum oru thoottravan
Unnai ninaithu vazha virumpavillai.unnodu nilaiththu vazha virumpinen .anal ne ennai thanithu vazha vittu senrayi.
ReplyDeleteஉங்கள் கவிதை படைப்புகளை இங்கே அனுப்பலாம்.